உலகம்

நேபாளத்தில் நில நடுக்கம்

Published On 2022-08-06 06:20 GMT   |   Update On 2022-08-06 06:20 GMT
  • நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.
  • நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

காத்மாண்டு:

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டம் பெல்கோட்கடி பகுதியில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது என்று தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

Tags:    

Similar News