உலகம்
null

அமெரிக்காவில் விமான என்ஜினில் தீப்பிடித்ததால் பரபரப்பு

Published On 2024-05-28 12:05 IST   |   Update On 2024-05-28 12:27:00 IST
  • விமானம் ஓடுபாதையில் சென்றபோது அதன் என்ஜினில் திடீரென்று கரும்புகை வெளியேறி தீப்பிடித்தது.
  • விமானம் நிறுத்தப்பட்டு அதிலிருந்த 148 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அமெரிக்கா சிகாகோவின் ஓஹேர் சர்வதேச விமான நிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சியாட்டில் நகருக்கு புறப்பட்டது.

அந்த விமானம் ஓடுபாதையில் சென்றபோது அதன் என்ஜினில் திடீரென்று கரும்புகை வெளியேறி தீப்பிடித்தது.

விமானத்தின் இறக்கைகளில் ஒன்றில் இருந்து புகை வெளியேறியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு அதிலிருந்த 148 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

விமானத்தில் உள்ளே இருந்த பயணி ஒருவர் என்ஜினில் தீப்பிடித்ததை வீடியோ எடுத்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.



Similar News