உலகம்

இத்தாலியில் கியாஸ் நிலையம் வெடித்து சிதறி 45 பேர் படுகாயம்

Published On 2025-07-05 05:04 IST   |   Update On 2025-07-05 05:04:00 IST
  • கியாஸ் கசிந்ததால் பயங்கர சத்தத்துடன் கியாஸ் நிலையம் வெடித்து சிதறியது.
  • இதனால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

ரோம்:

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கியாஸ் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.

அப்போது கியாஸ் கசிந்ததால் பயங்கர சத்தத்துடன் கியாஸ் நிலையம் வெடித்து சிதறியது. இதனால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதே சமயம் கியாஸ் நிலையம் வெடித்து சிதறியதில் 45 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

Tags:    

Similar News