உலகம்

பாகிஸ்தானில் கனமழை - வெள்ளம், மழை சார்ந்த விபத்தில் சிக்கி 23 பேர் பலி

Published On 2023-06-27 20:31 GMT   |   Update On 2023-06-27 20:31 GMT
  • பாகிஸ்தானில் கனமழை பெய்து வருகிறது.
  • வெள்ளம், மழை சார்ந்த விபத்துகளில் சிக்கி 23 பேர் பலியாகினர்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று கனமழை பெய்தது. ஷேக்புரா, நரொவெல் ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் கனமழை பெய்து வரும் நிலையில் நரோவால் மாவட்டத்தில் 5 பேரும், ஷேக்புரா மாவட்டத்தில் 2 பேர் என 7 பேர் உள்பட மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் வெள்ளத்தில் மூழ்கியும், மின்சாரம் தாக்கி 6 பேரும் பலியாகினர்.

மின்னல் தாக்கியும், மின்சாரம் தாக்கியும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வரும் 30-ம் தேதி வரை நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News