செய்திகள்

இந்தோனேசியா - சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி

Published On 2019-04-10 12:13 GMT   |   Update On 2019-04-10 12:13 GMT
இந்தோனேசியாவின் கலிமந்தன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaLandslide
ஜெகார்த்தா:

இந்தோனேசியாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில், இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கலிமந்தன் மாகாணத்தில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது.

அந்த மாகாணத்தில் அமைந்துள்ள சுரங்கத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த  ஊழியர்கள் சிக்கினர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர் என்றும், மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என பேரிடர் மேலாண்மை குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.  #IndonesiaLandslide
Tags:    

Similar News