செய்திகள்

அமெரிக்காவில் மது பாரில் மர்ம நபர்கள் சுட்டதில் 3 பேர் பலி

Published On 2018-07-30 05:02 GMT   |   Update On 2018-07-30 05:02 GMT
அமெரிக்காவில் மது பாரில் மர்ம நபர்கள் சுட்டதில் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். #gunfiring

நியூயார்க்:

அமெரிக்காவில் நியூ ஓர்லன்ஸ் புறநகரில் பிரபலமான மது பார் உள்ளது. நேற்று அங்கு பலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது மர்ம நபர்கள் 2 பேர் மது பாருக்குள் நுழைந்தனர். கோட்டுடன் தொப்பியுடன் கூடிய உடை அணிந்து இருந்தனர். அவர்கள் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென சரமாரியாக சுட்டனர்.

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. மது பாரில் இருந்தவர்கள் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தனர். ஓடிச் சென்று மறைவிடங்களில் பதுங்கினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். அவர்களில் 2 பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார். இவர்கள் தவிர 7 பேருக்கும் குண்டு காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் நியூ ஓர்லியன்ஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மர்ம நபர்கள் 10 பேரை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எனவே, முன்விரோதம் காரணமாக இத்தாக்குதல் நடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது. #gunfiring

Tags:    

Similar News