ராஜஸ்தான், டெல்லிக்கு இன்றும் நாளையும் சிறப்பு ரெயில்கள் இயக்கம்
- நெல்லையில் இருந்து நாளை இரவு 10.15 மணிக்கு டெல்லிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
சென்னை:
சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதிக்கு இன்றும், மதுரையில் இருந்து நாளை (21-ந்தேதி) யும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 06057), வருகிற செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதி சென்றடையும். மறுமாா்க்கமாக பகத் கீ கோதியில் இருந்து வருகிற 23-ந்தேதி அதிகாலை 5.30-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 06058), மறுநாள் இரவு 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இதில் 3 ஏ.சி. வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், சந்திரபூா், வா்தா, அகோலா, ஜல்கான், நந்தூா்பாா், உத்னா (சூரத்), வடோதரா, சபா்மதி பிஜி, ஜலோா், லூனி வழியாக இயக்கப்படும்.
மதுரையில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 06067) 23-ந்தேதி பிற்பகல் 12.30 மணிக்கு பகத் கீ கோதி சென்றடையும். மறுமாா்க்கமாக பகத் கீ கோதியில் இருந்து 24-ந்தேதியில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண். 06068), 26-ந்தேதி காலை 8.30 மணிக்கு மதுரை வந்தடையும்.
இதில் 12 மூன்றடுக்கு ஏ.சி. வகுப்பு பெட்டிகள், 6 எக்கனாமிக் ஏ.சி. வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், சந்திரபூா், வா்தா, அகோலா, ஜல் கான், நந்தூா்பாா், உத்னா (சூரத்), வடோதரா, சபா்மதி பிஜி, ஜலோா், லூனி வழியாக இயக்கப்படும்.
நெல்லையில் இருந்து நாளை இரவு 10.15 மணிக்கு டெல்லிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (எண். 06161), வருகிற 24-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு டெல்லி ஹசரத் நிஜா முதீனுக்கு சென்றடையும். இதில் படுக்கை வசதி கொண்ட 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மரு வத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், போ பால், குவாலியர், ஆக்ரா, மதுரா வழியாக இயக்கப்படும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.