தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2520 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2025-04-08 10:30 IST   |   Update On 2025-04-08 10:30:00 IST
  • அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறப்பதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
  • அணையில் தற்போது 75.30 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

சேலம்:

மேட்டூர் அணை மூலம் 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அதோடு ஏராளமான கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேட்டூர்அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்ததண்ணீர் கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறப்பதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2520 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 107.79 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 75.30 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News