தமிழ்நாடு செய்திகள்
null

கரூர் பெருந்துயரம்: ஆவணங்களை சமர்ப்பித்தது SIT

Published On 2025-10-14 17:33 IST   |   Update On 2025-10-14 17:33:00 IST
  • சென்னை உயர்நீதிமன்றம் SIT அமைத்தது.
  • உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதால், SIT சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்டல் நெரிசல் ஏற்பட்டடு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அஸ்ரா காக் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்த குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பான வழக்கை, சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. அத்துடன், சிபிஐக்கு வழக்கை மாற்ற உத்தரவிட்டதால், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு இடைக்கால தடைவிதித்தது.

இதனால் சிறப்பு புலனாய்வுக்குழு இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த ஆவணங்கள் சிபிஐ-யிடம் வழங்கப்படும்.

Tags:    

Similar News