தமிழ்நாடு செய்திகள்

குற்றாலம் ஐந்தருவியில் 2-வது நாளாக குளிக்க தடை

Published On 2025-09-26 14:17 IST   |   Update On 2025-09-26 14:17:00 IST
  • மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
  • குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ந்த கால நிலை நீடிக்கிறது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் இருந்து நீரோடைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக முக்கிய சுற்றுலா தலமாக காணப்படும் குற்றால அருவிகளுக்கு, தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலையில் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. அதேநேரம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

அதேபோன்று புலி அருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ந்த கால நிலை நீடிக்கிறது.

வனப்பகுதிக்குள் மழைப்பொழிவு குறைந்துள்ளதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைய தொடங்கியுள்ளது. இதனால் பிற்பகலில் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்க வாய்ப்பு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News