தமிழ்நாடு

கார்ல்சென்


உலக செஸ்சின் முக்கிய மையமாக சென்னை தற்போது திகழ்கிறது- கார்ல்சென் சொல்கிறார்

Published On 2022-07-27 06:33 GMT   |   Update On 2022-07-27 10:08 GMT
  • செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இந்திய அணிகள் மிகவும் பலம் பெற்றதாக இருக்கிறது
  • உலக செஸ்சின் முக்கிய மையமாக தற்போது சென்னை திகழ்கிறது.

உலக செஸ் சாம்பியனான மாக்னஸ் கார்ல்சென் மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கிறார். அவர் தலைமையிலான நார்வே அணி 3-வது தரவரிசையில் இருக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இந்திய அணிகள் மிகவும் பலம் பெற்றதாக இருக்கிறது. வியக்கத்தக்க வீரர்கள் இருக்கின்றனர். இந்தியாவின் இரண்டு அணிகளும் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

உலக செஸ்சின் முக்கிய மையமாக தற்போது தமிழ்நாடு அல்லது சென்னை திகழ்கிறது. செஸ் ஒலிம்பியாட் மூலம் இதை சொல்லலாம். இதனால் தான் நானும் இங்கு இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News