தமிழ்நாடு செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் டைரி மில்க் சாக்லேட்டில் புழு

Published On 2023-04-03 10:57 IST   |   Update On 2023-04-03 11:51:00 IST
  • மளிகை கடை ஒன்றில் வாலிபர் ஒருவர் டைரி மில்க் என சொல்லப்படும் விலை உயர்ந்த சாக்லேட் ஒன்றை வாங்கியுள்ளார்.
  • ஆசையாக வாங்கி அந்த சாக்லேட்டை பிரித்து பார்க்கும்போது அதில் புழுக்கள் இருந்துள்ளன.

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே மளிகை கடை ஒன்றில் வாலிபர் ஒருவர் டைரி மில்க் என சொல்லப்படும் விலை உயர்ந்த சாக்லேட் ஒன்றை வாங்கியுள்ளார். ஆசையாக வாங்கி அந்த சாக்லேட்டை பிரித்து பார்க்கும்போது அதில் புழுக்கள் இருந்துள்ளன. காலாவதி தேதி செப்டம்பர் மாதம் வரை உள்ள நிலையில் எப்படி புழுக்கள் வந்தது என தெரியாமல் புலம்பிய அந்த வாலிபர் இது குறித்து வீடியோக்கள் மற்றும் படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

தற்போது இந்த வீடியோக்கள் மற்றும் போட்டோ அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். டைரி மில்க் சாக்லேட் உலக அளவில் மிகவும் பிரபலமானது என்கிற நிலையில், காலாவதி தேதிக்கு முன்னரே இதில் புழுக்கள் எப்படி வந்தது என்பது மிகப்பெரும் கேள்வியாக உள்ளது.

Tags:    

Similar News