தமிழ்நாடு
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்
- மெயின் அருவியில் குளிப்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது.
- குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்றும், இதமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மாலை பொழுதில் விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையினால் அவ்வப்போது ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது ஐந்தருவி மற்றும் மெயின்அருவி, பழைய குற்றாலத்தில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் மற்ற இடங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருவதாலும் ஆறு, குளங்களில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குற்றால அருவிகளில் குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் ஐந்தருவி, மெயின் அருவியில் குளிப்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்றும், இதமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.