தமிழ்நாடு

ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர்

Published On 2023-10-30 06:23 GMT   |   Update On 2023-10-30 06:23 GMT
  • தமிழக மீனவர்கள் 64 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் இன்று வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.

ராமேசுவரம், அக்.30-

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல் லும்போது அவர்களை இலங்கை கடற்படை தாக்கி விரட்டி அடிப்பதும், எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறை பிடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அண்மைக்காலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பது அதிகரித்துள்ளது.

கடந்த 14-ந்தேதி இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 27 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனை கண்டித்தும் மீன வர்களை விடுதலை செய்யக் கோரியும் கடந்த 2 வாரங் களாக ராமேசுவரம் மீனவர் கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மீனவர்க ளின் வாழ்வாதாரத்தை கருதி வேலை நிறுத்தம் கடந்த சனிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. அன்றைய தினமே காலையில் ராமேசு வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்ற னர். ஆனால் அவர்களுக்கு கடலுக்கு சென்ற முதல் நாளே அதிர்ச்சி காத்திருந் தது.

ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி 37 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் சிறை பிடித்துச் சென்றனர். இது ராமேசுவரம் பகுதி மீன வர்களிடையே கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது.

அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் 64 பேர் இலங்கை கடற்படை யால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ராமேசுவரம் துறைமுக கடற்கரையில் நேற்று மீனவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தமிழக மீனவர்கள் 64 பேரையும், பறிமுதல் செய் யப்பட்ட விசைப்ப டகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி இன்று (திங் கட்கிழமை) முதல் ராமேசு வரத்தில் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத் தத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் வருகிற 3-ந்தேதி மண்டபம் ரெயில் நிலை யத்தில் சென்னை எக்ஸ்பி ரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்துவது, 6-ந்தேதி தங்கச்சிமடத்தில் குடும்பத்துடன் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ராமேசுவரத் தில் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசு வரம் துறைமுகத்தில் நங்கூர மிட்டு நிறுத்தி வைக்கப்பட் டிருந்தன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் மீன்பிடி துறை முகம் இன்று வேலை நிறுத் தம் காரணமாக வெறிச் சோடி காணப்பட்டது.

இது குறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், அண்மைக்காலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடித்து செல்வது அதிகரித் துள்ளது. இதற்கு மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உட னடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் வேலை நிறுத்தம் காரணமாக எங் கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது என வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News