தமிழ்நாடு

சேலம் மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2023-03-17 05:02 GMT   |   Update On 2023-03-17 05:02 GMT
  • சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
  • சோதனையால் சேலம் மத்திய சிறை முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சேலம்:

சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 150-க்கும் மேற்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர்களுடம் அடங்குவர். இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகள் கஞ்சா மற்றும் செல்போன் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன், சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் காலை 6.30 மணிக்கு சிறைக்கு அதிரடியாக சென்றனர்.

பின்னர் அங்குள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம், அஙகுலமாக சோதனை செய்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள், செல்போன் சார்ஜர், செல்போனை குழி பறித்து மறைத்து வைக்க பயன்படுத்தப்படும் இரும்பு ஆணிகள் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அந்த பொருட்கள் எப்படி உள்ளே வந்தது. அதற்கு சிறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உடந்தையா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த கேமிரா பதிவுகள் குறித்தும் பார்வையிட்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த சோதனையால் சேலம் மத்திய சிறை முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News