தமிழ்நாடு
பொங்கல் பண்டிகையொட்டி மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு
- கடைசி சேவை இரவு 12 மணி வரை நீட்டிப்பு.
- இரு நாட்களில் இரவு 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை இருக்கும்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வரும் ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மெட்ரோ ரெயிலின் கடைசி சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரவு 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு ரெயில் சேவை இருக்கும் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.