தமிழ்நாடு செய்திகள்

வேலூர் அருகே ரூ.14.71 கோடி ஹவாலா பணம் பறிமுதல் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரணை

Published On 2022-10-01 10:18 IST   |   Update On 2022-10-01 10:18:00 IST
  • சென்னையில் இருந்து கேரளாவுக்கு கருப்பு பணத்தை எடுத்து செல்வதாகவும், பெரிய இடத்து விவகாரம் என்றும் அவர்கள் கூறினர்.
  • பள்ளிகொண்டா போலீசார் 4 பேரையும் கைது செய்து கார் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கோவிந்தம்பாடி நெடுஞ்சாலையொட்டி கேரள மாநில பதிவெண் கொண்ட லாரியில் காரில் வந்தவர்கள் கொடுத்த பெரிய பைகளை மாற்றிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

பார்சலை சோதனையிட்டதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இதையடுத்து பணப்பைகளுடன் 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

இதில் சென்னையை சேர்ந்த நிசார் அஹமத், அவரது உறவினரான மதுரையை சேர்ந்த வாசிம் அக்ரம் மற்றும் கேரள மாநிலம் கோழிக்கோடுவை சேர்ந்த லாரி டிரைவர்கள் சர்புதீன், நாசர் என்பது தெரியவந்தது.

சென்னையில் இருந்து கேரளாவுக்கு கருப்பு பணத்தை எடுத்து செல்வதாகவும், பெரிய இடத்து விவகாரம் என்றும் அவர்கள் கூறினர். யாரிடம் இருந்து யாருக்காக பணம் கொண்டு செல்லப்படுகிறது என்ற தகவலை தெரிவிக்கவில்லை. மேலும் போலீசாரை மிரட்டும் தோணியில் அவர்கள் பேசினர்.

அவர்களிடம் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் விசாரித்ததில் ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட 48 பண்டல்களில் இருந்த பணத்தை எண்ணும் பணி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை நீடித்தது. இதில் ரூ.14. கோடிய 70 லட்சத்து 85,400 இருந்தது.

இது தொடர்பாக 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த பள்ளிகொண்டா போலீசார் 4 பேரையும் கைது செய்து கார் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் சென்னையில் உள்ள நாசர் அஹ்மதுவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளும், மத்திய புலனாய்வு குழுவினரும் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் பிடிபட்ட பணம் குறித்து விசாரிக்கப்படும் என மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News