பப்பாளியில் பெருமாள் உருவம்: பக்தர்கள் பூஜை செய்து வழிபாடு
- புதிய பஸ் நிலையம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் பெருமாள் வடிவில் இருந்த பப்பாளி பழத்தை சாமி அருகே வைத்தனர்.
- அதிசய பப்பாளி பழத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் முத்து மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். பழ வியாபாரி.
இவர் தினமும் வேலூர் அடுத்த அப்புக்கல்லில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பப்பாளி பழங்களை வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று மாலை ரங்கநாதன் விற்பனைக்காக ஏராளமான பப்பாளி பழங்களை கொண்டு வந்தார்.
இன்று காலை பப்பாளி பழங்களை தரம் பிரித்த போது அதில் இருந்த ஒரு பப்பாளி பழம் பெருமாள் உருவத்தில் இருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பப்பாளி பழத்துக்கு நாமம் இட்டு பூக்களை வைத்து பூஜைகளை செய்தனர்.
பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் பெருமாள் வடிவில் இருந்த பப்பாளி பழத்தை சாமி அருகே வைத்தனர்.
இந்த அதிசய பப்பாளி பழத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று பெருமாள் வடிவில் பப்பாளி பழம் இருந்தது அப்பகுதி மக்களிடையே பரவசத்தை ஏற்பத்தியது.