தமிழ்நாடு

பெரியதாங்கல்-காரணிபேட்டை ஏரிகளை தூர்வாரும் பணி- கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்

Published On 2022-06-17 07:55 GMT   |   Update On 2022-06-17 07:55 GMT
  • நீர் பிடிப்பு பகுதி மற்றும் நீர் தேக்க பகுதி ஆழப்படுத்தப்படும்.
  • வெள்ள தடுப்பு, வறட்சி தடுப்பு, பல்லுயிர் இனப்பெருக்கம் போன்றவற்றிற்கு வழி வகுக்கும்.

காஞ்சிபுரம்:

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லம் வடிகால் பகுதியில் உள்ள காரணிபேட்டை ஏரி மற்றும் பெரியதாங்கல் ஏரியை அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் ஏரி தூர் வாரி புனரமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை மூலம் ரூ.16 லட்சம் மதிப்பில் நடைபெறும் புனரமைப்பு பணிகளால் ஏரிகள் தூர் வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு, வரத்து வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்படும்.

நீர் பிடிப்பு பகுதி மற்றும் நீர் தேக்க பகுதி ஆழப்படுத்தப்படும். இதனால் நீர்த்தேக்கம் அதிகரிக்கும். நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

மேலும் வெள்ள தடுப்பு, வறட்சி தடுப்பு, பல்லுயிர் இனப்பெருக்கம் போன்றவற்றிற்கு வழி வகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் அருண், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சீனிவாசன், பவானி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News