தமிழ்நாடு
அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் ஆள் மாறாட்டம் மூலம் விற்பனை- 3 பேர் சிறையில் அடைப்பு
- போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் நில மோசடி பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
- வழக்கில் தொடர்புடைய நவங்கிள்ளி, மோகன், சுரேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் தங்களுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான 50 சென்ட் நிலத்தை ஆள் மாறாட்டம் மூலமாக பலருக்கு விற்பனை செய்துள்ளனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் நில மோசடி பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய நவங்கிள்ளி, மோகன், சுரேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளிக்குப்பத்தை சேர்ந்த 3 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.