தமிழ்நாடு

அக்.25-ந் தேதி சிறுவாபுரி முருகன் கோவில் நடை மூடப்படும் நேரம் அறிவிப்பு

Published On 2022-10-21 10:22 GMT   |   Update On 2022-10-21 10:22 GMT
  • சிறுவாபுரி முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் வழக்கமாக கூட்டம் அதிகம் இருக்கும்.
  • சூரிய கிரகணம் முடிந்த பின்னர் சாந்தி செய்யப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் தரிசனத்திற்கு கோவில் நடை திறக்கப்படும்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். செவ்வாய்க் கிழமைகளில் வழக்கமாக கூட்டம் அதிகம் இருக்கும்.

இந்த நிலையில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சூரிய கிரகணம் வருகிறது. அப்போது முக்கிய கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

இதேபோல் சிறுவாபுரி முருகன்கோவிலிலும் கிரகணத்தை முன்னிட்டு 25-ந்தேதி மதியம் 12 மணி முதல் மாலை 7 மணி வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டு கோவில் மூடப்படுகிறது.

சூரிய கிரகணம் முடிந்த பின்னர் சாந்தி செய்யப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் தரிசனத்திற்கு கோவில் நடை திறக்கப்படும் என்று கோவிலின் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News