தமிழ்நாடு செய்திகள்

பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் நடந்தது.

ராமேசுவரத்தில் ஆடி தேரோட்டம்- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-07-31 15:03 IST   |   Update On 2022-07-31 15:03:00 IST
  • தேரோட்டத்தை முன்னிட்டு பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
  • 4 ரத வீதி வழியாக அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

ராமேசுவரம்:

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த திருவிழா நிகழ்ச்சியில் தினசரி சுவாமி-அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் புறப்பாடாகி 4 ரத வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தனர். தினசரி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்ச்சியான அம்மன் திருத்தேரோட்டம் இன்று காலையில் கோவிலில் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி கோவிலின் கீழ் ரத வீதியில் அமைக்கப்பட்டிருந்த மரதேருக்கு வருகை தந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 4 ரத வீதி வழியாக அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News