தமிழ்நாடு செய்திகள்

நீச்சல் குளத்தில் மூழ்கி தனியார் நிறுவன மேலாளர் பலி

Published On 2023-10-15 14:26 IST   |   Update On 2023-10-15 14:26:00 IST
  • சூலேரிக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்ற அலுவலகம் சம்பந்தமான கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.
  • நீச்சல்குளம் தண்ணீரில் மூழ்கி ராம்குமார் பரிதாபமாக இறந்தார்.

மாமல்லபுரம்:

திருச்சி அடுத்த திருவானைக்கோயிலை சேர்ந்தவர் ராம்குமார் (வயது39). மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலைபார்த்து வந்தார்.

இவர் மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்ற அலுவலகம் சம்பந்தமான கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.

பின்னர் அங்குள்ள நீச்சல் குளத்தில் ராம்குமார் குளித்தார். அப்பேது அவர் திடீரென மயங்கினார். இதில் நீச்சல்குளம் தண்ணீரில் மூழ்கி ராம்குமார் பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News