தமிழ்நாடு

தண்டையார்பேட்டையில் அதிக விலைக்கு மதுபாட்டில் விற்ற தாய்-மகன் கைது

Published On 2023-09-23 09:24 GMT   |   Update On 2023-09-23 09:24 GMT
  • 160 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து தாய்-மகன் இருவரையும் கைது செய்தனர்.

ராயபுரம்:

புது வண்ணாரப்பேட்டை பகுதியில் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு வந்த 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்து புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த பார்த்திபன் (வயது 35) அவரது தாய் ராணி (55) என்று தெரிந்தது. தாய்-மகன் இருவரும் சேர்ந்து மதுபாட்டில்களை வாங்கி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களிடம் அதிக விலைக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 160 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தாய்-மகன் இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News