தமிழ்நாடு செய்திகள்

தூண்டில் வளைவு அமைக்க கோரி கூடுதாழை மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம்

Published On 2023-03-15 14:49 IST   |   Update On 2023-03-15 14:49:00 IST
  • போராட்டத்தின் 5-வது நாளான இன்று மீனவர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தொடர்ந்து மீனவர்கள் 5-வது நாளாக இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூடுதாழை கிராமத்தில் கடலரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி கடந்த 11-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி என வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

4-வது நாளான நேற்று கடற்கரையில் மீனவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தின் 5-வது நாளான இன்று மீனவர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள போராட்ட பந்தலில் அமர்ந்து கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதில் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மீனவர்கள் 5-வது நாளாக இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Tags:    

Similar News