தமிழ்நாடு
பசும்பொன்னில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள்- டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு
- பசும்பொன்னில் கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- பாதுகாப்பு பணியில் நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்துள்ளதாக போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை:
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 ஆயிரம் போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
சிறு மோதல் சம்பவம் கூட நடந்திராத வண்ணம் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததாகவும், இந்த சாதனையின் மூலம், தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என்றும், பாதுகாப்பு பணியில் நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்துள்ளதாகவும், போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில் இந்த பாராட்டை தெரிவித்துள்ளார்.