தமிழ்நாடு

தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவன் பலி- உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

Published On 2023-02-02 11:44 GMT   |   Update On 2023-02-02 11:44 GMT
  • மயங்கி விழுந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தான்.
  • கட்டையால் தாக்கியதில், வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் கழிவறையில் சிறுவன் மயங்கி விழுந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தான். பிரேத பரிசோதனையில், சிறுவன் அடித்து துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது. சிறுவனை கட்டையால் தாக்கியதில், வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் விஜயகுமார், ஊழியர்கள் யுவராஜ், டில்லிபாபு, ஜீவிதன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News