தமிழ்நாடு
கொலை

திருக்கோவிலூரில் பிளஸ்-1 மாணவரை வெட்டி கொன்ற நண்பர் கைது

Published On 2022-05-16 04:07 GMT   |   Update On 2022-05-16 04:07 GMT
தன்னை அடிக்கடி கேலி கிண்டல் செய்ததால் பிளஸ்-1 மாணவரை வெட்டி கொன்றதாக கைதான மற்றொரு மாணவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே டி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. அவரது மகன் கோகுல் (வயது 17). இவர் திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவர் இரவு நேரத்தில் வீட்டில் இருந்தபோது 17 வயது மாணவர் அங்கு வந்தார். பின்னர் கோகுலை விருந்துக்கு செல்லலாம் என்று அழைத்தார். ஆனால் கோகுலின் தாய் ஜெயபாரதி இரவு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது என்று கூறினார். எனினும் கோகுல் அந்த நண்பருடன் சென்றார்.

இந்த நிலையில் கோகுல் திருக்கோவிலூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறிதுடித்தனர்.

தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று கோகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். எனினும் இந்த கொலை வழக்கு தொடர்பாக கோகுலை அழைத்து சென்ற நண்பர் கனகநந்தல் கிராமத்தை சேர்ந்த கலையரசனின் மகன் அருண் ஆகாஷ் (17) என்பவரை கைது செய்தனர்.

இவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தன்னை அடிக்கடி கேலி கிண்டல் செய்ததால் கோகுலை கொலை செய்ததாக தெரிவித்தார். எனினும் இந்த கொலை வழக்கில் சந்தேகம் இருப்பதாகவும், ஒருவர் மட்டும் இதனை செய்ய முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என கூறி உறவினர்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை சமரசபடுத்தி அனுப்பிவைத்தனர். கைதான அருண்ஆகாஷ் கடலூர் சிறுவர் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News