செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குலதெய்வம் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு
தேர்தலில் நிற்கும் போதும் மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும் ஓ.பன்னீர்செல்வம் குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைஅடி வாரத்தில் உள்ளது வனப்பேச்சி அம்மன் கோவில். இது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் குல தெய்வம் ஆகும்.
தேர்தலில் நிற்கும் போதும், மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும் ஓ.பன்னீர்செல்வம் இங்கு வந்து குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கம்.
அதேபோல் நேற்று அவர் குலதெய்வம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைஅடி வாரத்தில் உள்ளது வனப்பேச்சி அம்மன் கோவில். இது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் குல தெய்வம் ஆகும்.
தேர்தலில் நிற்கும் போதும், மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும் ஓ.பன்னீர்செல்வம் இங்கு வந்து குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கம்.
அதேபோல் நேற்று அவர் குலதெய்வம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.