செய்திகள்
கைது

பட்டாசு ஆலை வெடிவிபத்து- ஆலை உரிமையாளர் கைது

Published On 2021-02-18 03:32 GMT   |   Update On 2021-02-18 05:28 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12-ந்தேதி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்குள்ள அறைகள் இடிந்து தரைமட்டமானது.

இந்த வெடிவிபத்தில் கணவன்-மனைவி, கர்ப்பிணி பெண், கல்லூரி மாணவி உள்பட 20 பேர் பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த சிலர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர்கள் சக்திவேல், பொன்னுபாண்டி, சிவக்குமார், ராஜா, வேல்ராஜ் ஆகிய 6 பேர் மீது ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இவர்களில் பொன்னுபாண்டி, சக்திவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சக்திவேல் மனைவி ஜெயராமு (வயது39) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரியை போலீசார் கைது செய்தனர்.

இதுவரை இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News