செய்திகள்
புதுச்சேரி மாநில பேரிடர் மையத்தில் முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாநில பேரிடர் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி:
நிவர் புயலானது இன்று புதுச்சேரி அருகே கரையை கடக்கும் நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாநில பேரிடர் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தகவல் பரிமாற்றம் குறித்து மையத்தில் உள்ள அதிகாரிகடம் விசாரித்த அவர், புயல் வருவதை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்கவும், பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்தால் முன்னெச்சரிக்கையாக தகவல் அளிக்கவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் பொதுமக்கள் அவசர கால மையத்தை தொடர்பு கொண்டால் உடனடியாக தொடர்புடைய துறைக்கு தகவல் அளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நிவர் புயலானது இன்று புதுச்சேரி அருகே கரையை கடக்கும் நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாநில பேரிடர் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தகவல் பரிமாற்றம் குறித்து மையத்தில் உள்ள அதிகாரிகடம் விசாரித்த அவர், புயல் வருவதை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்கவும், பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்தால் முன்னெச்சரிக்கையாக தகவல் அளிக்கவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் பொதுமக்கள் அவசர கால மையத்தை தொடர்பு கொண்டால் உடனடியாக தொடர்புடைய துறைக்கு தகவல் அளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.