செய்திகள்
கோப்புப்படம்

9 வாரங்களுக்கு பிறகு மீண்டும் களை கட்ட காத்திருக்கும் ஞாயிற்றுக்கிழமை

Published On 2020-09-04 06:13 GMT   |   Update On 2020-09-04 06:13 GMT
கடந்த பல வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்குள் முடங்கி கிடந்த மக்கள் இந்த வாரம் மகிழ்ச்சியோடு வெளியே செல்வதற்கு காத்திருக்கிறார்கள்.
சென்னை:

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

சென்னையில் 11 வாரங்களாக இது அமலில் இருந்தது. ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் முக்கிய அம்சமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.

இதன்மூலம் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் களை கட்ட காத்திருக்கிறது. கடந்த பல வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்குள் முடங்கி கிடந்த மக்கள் இந்த வாரம் மகிழ்ச்சியோடு வெளியே செல்வதற்கு காத்திருக்கிறார்கள்.

இதன்மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News