செய்திகள்
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு

Published On 2020-08-14 02:25 GMT   |   Update On 2020-08-14 02:25 GMT
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:

கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வந்தது. இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டம் கடந்த 10-ந் தேதி 100 அடியை தாண்டியது.

தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்து வந்தது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் 101 அடியை தாண்டியது.

இந்நிலையில் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது.

அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் அணையை திறந்து வைத்தனர்.

120 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதியிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலம் பயன்பெறும்.

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News