செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

புதுச்சேரியில் இன்று புதிதாக 124 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-22 13:21 IST   |   Update On 2020-07-22 13:21:00 IST
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 124 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,300 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்குகிறது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,27,031 பேரும், தமிழகத்தில் 1,80,643 பேரும், டெல்லியில் 1,25,096 பேரும், உத்தர பிரதேசத்தில் 53,288 பேரும், கர்நாடகாவில் 71,069 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300ஆக உயர்ந்துள்ளது. 

Similar News