செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் இன்று புதிதாக 91 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-21 11:42 IST   |   Update On 2020-07-21 11:42:00 IST
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,179 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,148 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 587 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,18,695 பேரும், தமிழகத்தில் 1,75,678 பேரும், டெல்லியில் 1,23,747 பேரும், கர்நாடகாவில் 67,420 பேரும், உத்தர பிரதேசத்தில் 51,160 பேரும், மேற்கு வங்காளத்தில் 44,769 பேரும், குஜராத்தில் 49,353 பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,179ஆக உயர்ந்துள்ளது. 

Similar News