செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா

Published On 2020-05-22 14:52 IST   |   Update On 2020-05-22 14:52:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 6,282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 655 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேடவாக்கம், பெரும்பாக்கம், செங்கல்பட்டு, காட்டாங்கொளத்தூர், குரோம்பேட்டை, பொழிச்சலூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் 26 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 681 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 233 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News