செய்திகள்
கொரோனா சிறப்பு வார்டு (கோப்பு படம்)

கொரோனா பாதிப்பு- செங்கல்பட்டு மருத்துவமனையில் முதியவர் உயிரிழப்பு

Published On 2020-05-13 11:25 IST   |   Update On 2020-05-13 11:25:00 IST
செங்கல்பட்டில் 52 வயது முதியர்வர் ஒருவர் கொரோனா வைரசுக்கு பலியானார்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த 52 வயது நபர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையறிந்த அவர், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

பின்னர் அவரை காவல்துறையினர் தேடி கண்டுபிடித்து செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கொரோறா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இதன்மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Similar News