செய்திகள்
சிதம்பரம் சேமிப்பு கிடங்கில் தீவிபத்து- 1000 மூட்டை அரிசி எரிந்து சாம்பல்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அரிசி சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த மணலூரில் இந்திய உணவு கழகத்தின் அரிசி சேமிப்பு கிடங்கு உள்ளது.
இங்கு 6-க்கும் மேற்பட்ட குடோன்கள் உள்ளன. இதில் உள்ள 1-பி என்ற குடோனில் 3,500 அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
நேற்று இரவு அந்த குடோனில் மின்கசிவின் காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
உடனே ஊழியர்கள் அனைவரும் குடோனை விட்டு வெளியே வந்தனர். பின்னர் இது குறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கபாஷ்சியம் தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து தொடர்பாக சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த மணலூரில் இந்திய உணவு கழகத்தின் அரிசி சேமிப்பு கிடங்கு உள்ளது.
இங்கு 6-க்கும் மேற்பட்ட குடோன்கள் உள்ளன. இதில் உள்ள 1-பி என்ற குடோனில் 3,500 அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
நேற்று இரவு அந்த குடோனில் மின்கசிவின் காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
உடனே ஊழியர்கள் அனைவரும் குடோனை விட்டு வெளியே வந்தனர். பின்னர் இது குறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கபாஷ்சியம் தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து தொடர்பாக சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.