செய்திகள்
முக கவசம்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு முக கவசம் அணிந்து வந்த வெளிநாட்டு பயணிகள்

Published On 2020-03-14 10:04 IST   |   Update On 2020-03-14 10:04:00 IST
கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தப்பிக்க சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்தபடி வந்தனர்.
சிதம்பரம்:

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி உள்ளது. இதையொட்டி அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

தமிழகத்திலும் இந்த வைரஸ் தாக்குதல் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி பள்ளி, கல்லூரிகள் மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ்சை தடுக்க நெய்வேலி என்.எல்.சி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.

அனைத்து பணியாளர்களும் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பால் கோவில்களிலும் பக்தர்கள் வருகை குறைந்து உள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று வந்தனர். அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு பினனர் கோவிலில் உள்ள கோபுரங்களின் அழகை கண்டு மெய்சிலிர்த்து நின்றனர்.

அப்போது கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தப்பிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்தபடி வந்தனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாட்டினர் சுற்றுலா பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News