செய்திகள்
பயோமெட்ரிக் வருகை பதிவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் பயோமெட்ரிக் வருகை பதிவு ரத்து

Published On 2020-03-13 04:24 GMT   |   Update On 2020-03-13 04:24 GMT
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் வருகிற 31-ந்தேதி வரை பயோமெட்ரிக் வருகைபதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது.
சிதம்பரம்:

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா பீதி மக்களை விட்டு அகலவில்லை.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவுவதற்கு முக்கிய காராணமாக பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களில் இருந்து பரவுவதாக தெரிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக முக்கிய அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு நெய்வேலி என்.எல்.சி.யில் பயோமெட்ரிக்முறை வருகை பதிவு ரத்துசெய்வதாக நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு முறை உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வருகிற 31-ந்தேதி வரை பயோமெட்ரிக் வருகைபதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது. அதற்கு பதிலாக தங்களது அட்டையை பயோமெட்ரிக் மிஷினில் காண்பித்து தங்கள் வருகையை பதிவு செய்யலாம் என தெரிவிக்கபட்டு உள்ளது. இந்த தகவலை பல்கலை கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பதிவாளர் கிருஷ்ணமோகன் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News