செய்திகள்
பஸ் சக்கரத்தில் சிக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி
பஸ் சக்கரத்தில் சிக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் குறித்து சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த திருமங்கலம் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் விஜி. இவரது மகன் அரிஹரன் (வயது 12). பன்னூரில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
அரிஹரன் இன்று காலை வழக்கம் போல் சுங்குவார் சத்திரத்தில் இருந்து அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்பக்க படிக்கட்டில் நின்றார்.
பஸ் சிறிது தூரம் சென்ற போது திடீரென அரிஹரன் தவறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே அரிஹரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த திருமங்கலம் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் விஜி. இவரது மகன் அரிஹரன் (வயது 12). பன்னூரில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
அரிஹரன் இன்று காலை வழக்கம் போல் சுங்குவார் சத்திரத்தில் இருந்து அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்பக்க படிக்கட்டில் நின்றார்.
பஸ் சிறிது தூரம் சென்ற போது திடீரென அரிஹரன் தவறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே அரிஹரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.