விளையாட்டு

உலக கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா 5-வது சுற்றுக்கு முன்னேறுவாரா? டைபிரேக்கரில் இன்று மோதல்

Published On 2025-11-13 11:51 IST   |   Update On 2025-11-13 11:51:00 IST
  • 2-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகியோர் மோதிய ஆட்டம் ‘டிரா’ ஆனது.
  • பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகிய 3 பேரும் இன்றைய டை பிரேக்கரில் மோதுகிறார்கள்.

பனாஜி:

11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.

3-வது சுற்றின் முடிவில் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, பிரணவ், அரி கிருஷ்ணா, கார்த்திக் வெங்கட்ராமன் ஆகிய 5 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

4-வது சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ரஷிய வீரர் டேனியல் டுபோவுடனும், அர்ஜூன் எரிகைசி அங் கேரி வீரர் பீட்டர் லிகோவு டனும், பிரணவ் உஸ்பெகிஸ் தான் வீரர் நோடிர் பெக்குடனும், அரிகிருஷ்ணா சுவீ டனை சேர்ந்த நில்ஸ் கிராண்டிலியசுடனும், கார்த்திக் வெங்கட்ராமன் வியட்நாம் வீரர் லீம் லெகு வாங்குடனும் மோதினார்கள். 5 வீரர்களும் முதல ஆட்டத்தில் 'டிரா'செய்தனர்.

நேற்றைய 2-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகியோர் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது. பிரணவ், கார்த்திக், வெங்கட்ராமன் ஆகியோர் 2-வது ஆட்டத்தில் தோற்று வெளியேறினார்கள்.

பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகிய 3 பேரும் இன்றைய டை பிரேக்கரில் மோதுகிறார்கள். இதில் வெற்றி பெற்று 5-வது சுற்றுக்கு நுழைவார்களா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News