விளையாட்டு

செஸ் மீதான ஈடுபாட்டால் விளையாட வந்துள்ளேன்- இலங்கை வீராங்கனை நெகிழ்ச்சி

Published On 2022-08-02 17:54 IST   |   Update On 2022-08-02 17:54:00 IST
  • எங்கள் நாட்டில் தற்போது மோசமான நிலை இருந்தாலும் செஸ் மீதுள்ள ஈடுபாட்டால் விளையாட வந்துள்ளேன்.
  • தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை செஸ்சின் மெக்கா என அழைக்கப்படுகிறது.


செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இலங்கை வீராங்கனை சச்சினி கூறியதாவது:-

எங்கள் நாட்டில் தற்போது மோசமான நிலை இருந்தாலும் செஸ் மீதுள்ள ஈடுபாட்டால் விளையாட வந்துள்ளேன். நிதி வசதி இல்லாமல் நாங்களே நிதி திரட்டி செஸ் ஒலிம்பியாட்டுக்காக சென்னை வந்தோம். இங்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை செஸ்சின் மெக்கா என அழைக்கப்படுகிறது. இங்கு செஸ் ஒலிம்பியாட் நடப்பது பொருத்தமானது. நாங்கள் முடிந்தவரை வெற்றி பெற போராடுவோம் என்றார்.

Tags:    

Similar News