விளையாட்டு

PKL 2025 தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 2ஆவது தோல்வி..!

Published On 2025-08-30 21:28 IST   |   Update On 2025-08-30 21:28:00 IST
  • தெலுங்கு டைட்டன் கேப்டன் விஜய் மாலிக அதிகப்பட்சமாக 14 புள்ளிகள் பெற்றார்.
  • உ.பி. யோதாஸ் ரைடர் ககன் கவுடா 14 புள்ளிகள் பெற்றார்.

புரோ கபடி லீக் 2025 சீசன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்- தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இதில் தெலுங்கு டைட்டன்ஸ் 35-38 எனத் தோல்வியடைந்தது.

தெலுங்கு டைட்டன்ஸ் இன்று தனது 2ஆவது அட்டத்தில் உ.பி. யோதாஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியிலும் 35-40 எனத் தோல்வியை தழுவியது. உ.பி. யோதாஸ் அணியின் ரைடர் குமன் சிங் 7 புள்ளிகள் பெற்றார். மற்றொரு ரைடர் ககன் கவுடா 14 புள்ளிகள் பெற்றார். டிபெண்டர் (Defender) சுமித் 8 பேரை அட்டகாசமாக பிடித்து அவுட்டாக்கினார். இதில் ஒன்று சூப்பர் டேக்கிள் ஆகும்.

தெலுங்கு டைட்டன்ஸ் அணி சார்பில் கேப்டன் விஜய் மாலிக் ரெய்டு மூலம் 3 போனஸ் புள்ளிகள் உள்பட 13 புள்ளிகளும், டேக்கிள் மூலம் ஒரு புள்ளியும் என 14 புள்ளிகள் பெற்று அசத்தினார்.

Tags:    

Similar News