செய்திகள்
பிரெட் லீ

இந்தியாவுக்கு உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது - பிரெட் லீ நம்பிக்கை

Published On 2021-10-21 23:15 GMT   |   Update On 2021-10-21 23:15 GMT
20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா முன்னணியில் இருப்பதாக பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஐ.சி.சி. இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில் அவர் கூறியதாவது:

20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் நாங்கள் அதிகமாக சாதித்ததில்லை. அதை மாற்றுவதற்கு இதுவே சரியான நேரம். அதற்கு எல்லா வகையிலும் நாங்கள் முயற்சிக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகள் உள்ள நிலையில் கோப்பையை வெல்வது எளிதானது அல்ல. 

இந்த ஆஸ்திரேலிய அணியில் திறமையான வீரர்கள் நிறைந்துள்ளனர். இதில் டேவிட் வார்னர் முக்கிய வீரராக இருப்பார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் நடத்தப்பட்ட விதத்தால் அவரது நம்பிக்கை குறைந்திருக்கலாம். ஆனால் அவர் முக்கியமான தருணத்தில் ஜொலிக்கக் கூடியவர்.

உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்த உலக கோப்பையில் அதிக ரன் குவிப்பில் இந்தியாவின் லோகேஷ் ராகுலும், அதிக விக்கெட் வீழ்த்துவதில் முகமது ஷமியும் முதலிடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
Tags:    

Similar News