செய்திகள்
தவான்

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2021-05-02 17:56 GMT   |   Update On 2021-05-02 17:56 GMT
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் வீரர் ஷிகர் தவான் அரை சதம் அடித்து அந்த அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
அகமதாபாத்:

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 29-வது ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் 99 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் மட்டும் இழந்து 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 69 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
Tags:    

Similar News