செய்திகள்
கேஎல் ராகுல்

கடைசி ஓவரில் 22 ரன்கள் - ஆர்சிபி-க்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

Published On 2021-04-30 15:51 GMT   |   Update On 2021-04-30 15:51 GMT
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்துள்ளது. ராகுல் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார்.
அகமதாபாத்:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் 26-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் லேசஞ்சர்ஸ் பெங்களூரு- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்நிலையில் பஞ்சாப் அணி பேட்டிங் இறங்கினர். தொடக்க ஆட்டக்காரராக ராகுல் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 7 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து ராகுல் கெய்ல் ஜோடி சிறப்பாக ஆடினர். கெய்ல் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் பூரன் 0, ஹூடா 5, ஷாருக்கான் 0, என அடுத்தடுத்து வெளியேறினார்.

இதனையடுத்து ராகுலுடன் ஹர்பிரீத் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இந்த ஜோடி கடைசி ஓவரில் 22 ரன்கள் குவித்தது. ராகுல் 51 பந்துகளில் 91 ரன்களும் ஹர்பிரீத் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

ஆர்சிபி தரப்பில் ஜேமிசன் 2, சாம்ஸ், சாஹல், அகமது தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News