செய்திகள்
ஹர்பஜன் சிங், எம்எஸ் டோனி

உலக கோப்பை அணிக்கு எம்எஸ் டோனி தேவை என்றால், அவரை தேர்வு செய்ய வேண்டும்: ஹர்பஜன் சிங்

Published On 2020-04-16 13:32 GMT   |   Update On 2020-04-16 13:32 GMT
எம்எஸ் டோனிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என்பதை முடிவு செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எம்எஸ் டோனி விளையாடவில்லை. ஐபிஎல் 2020 சீசனில் சிறப்பாக விளையாடினால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் டோனிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டோனி அணிக்கு வேண்டும் என்று நினைத்தால் அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘டோனியை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவதை பார்ப்பீர்களா? அல்லது அவருக்கு மரியாதை கொடுப்பீர்களா? அவர் இந்தியாவின் தலைசிறந்த வீர்ரகள் ஒருவரும் மற்றும் கேப்டன் என்பதை குறித்து பரிசீலனை செய்வீர்களா?. அவர் இந்தியா அணிக்காக பாடுபட்டுள்ளார்.

எம்எஸ் டோனி மிகமிக பெரிய வீரர். அவருக்கு விளையாடக்கூடிய திறமை இருக்கிறதா? அல்ல இல்லையா? என்பது குறித்து அவர் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. ஆகவே, நீங்கள் இதுகுறித்து மிகப்பெரிய அளவில் சிந்திக்க வேண்டியதில்லை. உங்களுக்கு எம்எஸ் டோனி வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அவர் தயாராக இருந்தால், அவரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News