செய்திகள்
சானியா மிர்சா

கொரோனா வைரஸ் தொற்று: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரூ. 1.25 கோடி நிதி திரட்டிய சானியா மிர்சா

Published On 2020-03-31 17:22 IST   |   Update On 2020-03-31 17:22:00 IST
இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கொரோனா வைரஸ் தொற்று ஊடரங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவுவதற்காக 1.25 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் நோயை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில் 21 நாள் ஊடரங்கு உத்தரவால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சாப்பாடு வழங்குதல் போன்ற அடிப்படை வசதிகளை தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் செய்து வருகிறார்கள்.

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா இதுபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார். இதற்கென தன்னுடன் சிலரை இணைத்துக் கொண்டு சேவை செய்ய தொடங்கியுள்ளார். இதுவரை 1 லட்சம் பேருக்கு உதவும் வகையில் 1.25 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாகவும், 10 ஆயிரம் பேருக்கு உணவு அளித்துள்ளதாகவும் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Similar News