செய்திகள்
உலக தடகளம் சாம்பியன்ஷிப்ஸ் 2022-க்கு தள்ளி வைப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021-க்கு தள்ளி வைக்கப்பட்டதன் காரணமாக உலக தடகளம் சாம்பியன்ஷிப்ஸ் 2022-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருந்ததால் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் நலன் கருதி ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அடுத்த வருடம் ஜூலை மாதம் 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் உலக தடகளம் சாம்பியன்ஷிப்ஸ் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தது. தற்போது ஒலிம்பிக் போட்டி 8-ந்தேதி வரை நடைபெற இருப்பதால் உலக தடகளம் சாம்பியன்ஷிப்ஸ் 2022-க்கு மாற்றப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு போட்டிக்கு தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஒருங்கிணைப்பார்கள் தெரிவித்துள்ளனர்.